கரூர் புதிய கலெக்டர், எஸ்பி பதவியேற்பு

கரூர், ஏப். 3: கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த மலர்விழி தமிழ்நாடு மின்பகிர்மான கழக இணை மேலாண்மை இயக்குநராகவும், அந்த பொறுப்பில் இருந்த பிரசாந்த் வடநேரே கரூர் மாவட்ட கலெக்டராவும் தேர்தல் ஆணையம் நியமித்து உத்தரவிட்டது.இதனடிப்படையில், கரூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட பிரசாந்த் வடநேரே நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு இவர் திருவண்ணாமலை, கடலூர், கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களின் கலெக்டராகவும் பணியாற்றிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், கரூர் மாவட்ட புதிய எஸ்பியாக அறிவிக்கப்பட்ட ஷஷாங் சாய் நேற்று காலை கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: