குளித்தலை, ஏப்.2: குளித்தலை அருகே சிறுமியை கட்டாய திருமணம் செய்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.குளித்தலை அடுத்த தோகைமலை பொருந்தலூர் கிராமம் கல்வட நாயகன் பட்டியைச் சேர்ந்தவர் அப்பா நாயக்கர் (49). விவசாயி. இவருக்கு 3 மகள்கள். இதில் 16 வயதுடைய தனது மூத்த மகளை காணவில்லை என கடந்த 17.6.2020 அன்று தோகைமலை போலீசில் புகார் செய்தார். ஆனால் காணாமல் போன பெண் தானாக வந்து தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை என்று கூறியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 17.8.2020 அன்று பொருந்தலூருக்கு பைக்கிள் வந்த ரங்கசாமி என்பவர் சிறுமியை திருமணம் செய்துள்ளதாக கூறி அதற்கான போட்டோவை இளம்பெண்ணின் தாயிடம் காண்பித்ததாக கூறப்படுகிறது.