பெரம்பலூர், ஏப்.1: பெரம்பலூர் நகராட்சி முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முன் மாதிரி நகராட்சியாக மாற்றியமைக்கப்படும் என பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் உறுதி அளித்தார்.
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இளம்பை தமிழ்ச் செல்வன் போட்டியிடுகிறார். இவர் நேற்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆத் தூர் சாலை, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ரோவர்ஆர்ச், 100அடி சாலை உள்ளிட்டபகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டார். அவருக்குப் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர் வாக் காளர்களிடம் பேசியதாவது: பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளையும் பெற நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.