பேரணாம்பட்டு, ஏப்.1: குடியாத்தம் தனி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி பொதுப்பார்வையாளர் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் உள்ளிட்டவைகள் அடங்கிய சீட்டுகள் ஒட்டும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இப்பணிகளை பொதுப்பார்வையாளர் விபுல் உஜ்வால் ஆய்வு செய்தார்.