நாகை, ஏப். 1: சட்டமன்ற தேர்தலையொட்டி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது. நாகை கலெக்டர் பிரவீன்பிநாயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடை இயங்காது.