மதுரை, ஏப்.1: மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார்.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.தளபதி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரை தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்று வருகின்றனர். மேலும் முக்கிய பிரமுகர்ளை சந்தித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொண்டார். அவர் வார்டு வார்டாக சென்று வாக்குசேகரித்தார். நேற்று புதூர் பகுதியை சுற்றிலும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அனைத்து பகுதிகளிலும் தடையில்லாத சுத்தமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். பாதாளசாக்கடைவசதிகளை மேம்படுத்தி தருவேன். படிக்கும் திறனை மேம்படுத்த நூலக வசதி செய்து தருவேன். அதிநவீன சமுதாயக்கூடம் அமைக்கப்படும். பட்டா பெற்றுத்தருவேன்.