மதுரை வடக்கு ெதாகுதியில் தளபதியை ஆதரித்து வைகோ பிரசாரம்

மதுரை, ஏப்.1: மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.தளபதி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரை தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்று வருகின்றனர். மேலும் முக்கிய பிரமுகர்ளை சந்தித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொண்டார். அவர் வார்டு வார்டாக சென்று வாக்குசேகரித்தார். நேற்று புதூர் பகுதியை சுற்றிலும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அனைத்து பகுதிகளிலும் தடையில்லாத சுத்தமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். பாதாளசாக்கடைவசதிகளை மேம்படுத்தி தருவேன். படிக்கும் திறனை மேம்படுத்த நூலக வசதி செய்து தருவேன். அதிநவீன சமுதாயக்கூடம் அமைக்கப்படும். பட்டா பெற்றுத்தருவேன்.

முதியோர்கள் மற்றும் விதவைப்பெண்களுக்கான உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களிடம் வாக்குசேகரித்தார். இந்நிலையில் ரேஸ்கோர்ஸ் மைதானம், மாநகராட்சி வளாகத்தில்  நடைபயிற்சி செய்தவர்களிடம் வாக்குகள் கேட்டு நோட்டீஸ் வழங்கினார். மேலும் தொகுதியில் திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பொன்முத்துராமலிங்கம், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் பொன்சேதுராமலிங்கம், காங்கிரஸ் மாவட்டதலைவர் கார்த்திகேயன், திமுக நிர்வாகிகள் முகேஷ்சர்மா, பசீர்அலி, பல்ராம், தனுஷ்கோடி வட்ட செயலாளர் யாசின்பாபு, பகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரசார், கம்யூனிஸ்ட் கட்சியினர், விசிகவினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.

Related Stories: