கொடைக்கானல், ஏப். 1: பழநி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று கொடைக்கானல் நகர், கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ‘கொடைக்கானல் மலைப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். மலைப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளும், நீண்டநாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள திட்டங்களும் உடனடியாக நிறைவேற்றப்படும். குறிப்பாக குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மலைவாழ் மக்கள் தங்களது தேவைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்.