நத்தம், ஏப். 1: நத்தம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் நேற்று செந்துறை பகுதிகளான பழனிபட்டி, குடகிப்பட்டி, அடைக்கனூர், மணக்காட்டூர், குப்புளிபட்டி, சுக்காம்பட்டி, வேப்பம்பட்டி, சரளைப்பட்டி, கோட்டைப்பட்டி, நயினாகவுண்டன்பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ‘ பிள்ளையார்நத்தத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் இப்பகுதி மக்கள் செல்போன் அழைப்புகளை பெற முடியாமலும், தகவல்- தொலை தொடர்பு, இணைய சேவைகளை பயன்படுத்த முடியாமல் பெரும்பாலும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள் பாட வகுப்புகளை ஆன்லைனில் படிப்பவர்கள் செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்தை தேடி அலையும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதை சரிசெய்ய செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.