மதுரை, மார்ச் 31: மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரிய வழக்கில் கலெக்டர் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘நெல்லை விஜயநாராயணம் பெரியகுளம் கண்மாய்க்கு மணிமுத்தாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் கண்மாய் நிரம்புகிறது. அரசாணைப்படி அணையில் இருந்து கடந்தாண்டு டிச.1 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.