பெரம்பலூர்,மார்ச் 31: பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக பிரபாகரன் போட்டியிடுகிறார். பெரம்பலூர் ஒன்றியம், புதுநடுவலூர் மற்றும் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம், குரும்பலூர், ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, புதூர் ஆகிய இடங்களில் நேற்று தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் பிரபாகரன் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் தான் பெரம்பலூர் கல்வியில் தன்னிகரில்லா வளர்ச்சியை பெற்றது. கீழக்கணவாயில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும், பெரம்பலூரில் அரசு ஐடிஐ ஆகியவை கொண்டுவரப்பட்டது.