திருத்தணி, மார்ச் 31: திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளர் கோ.அரி நேற்று திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட தரணிவராகபுரம், எம்.ஜி.ஆர்.நகர், ராகவேந்திரா நகர், தெக்கலூர், சூரியநகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, அதிமுக வேட்பாளர் கோ.அரி பேசியதாவது, “அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால் மக்களுக்கு வாஷிங்மெஷின், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர், அனைத்து வீடுகளுக்கும் இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும். எனவே, அதிமுக தேர்தல் அறிக்கை அனைத்தும் நிறைவேற்ற எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்று கேட்டுக்கொண்டார்.