பூந்தமல்லி, மார்ச் 31: பூந்தமல்லி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி ேநற்று பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பாரிவாக்கத்தில் தொடங்கி பாணவேடுதோட்டம், வயலாநல்லூர், சோரஞ்செரி, கோலப்பஞ்செரி, செம்பரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய திமுக செயலாளருமான பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் வீதி, வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். பாரிவாக்கத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எம்.முத்தமிழ்செல்வன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விமலா மோகன் ஆகியோர் பிரம்மாண்ட வரவேற்பளித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்று வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் வே.தணிகாசலம் மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க வாண வேடிக்கைளுடன் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி பேசியதாவது, “நான் எம்எல்ஏவாக பதவியேற்று பள்ளி கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டப்பணிகளை செய்து கொடுத்துள்ளேன். மேலும் பல திட்டங்களை கொண்டு வந்து பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்,” என்றார்.