ஊத்தங்கரையில் போலீசார் கொடி அணிவகுப்பு

ஊத்தங்கரை, மார்ச் 31:ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பு ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேசன் முன்பு தொடங்கி ஊத்தங்கரை நான்கு வழிச்சாலை, பஸ்நிலையம், அரசு மருத்துவமனை, அரசமரத் தெரு, கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை சென்றது. கொடி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு ஊத்தங்கரை போலீஸ் டிஎஸ்பி ராஜபாண்டியன் தலைமை வகித்தார். இதில், துணை ராணுவ படையினர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு காவல் போலீசார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: