ஊட்டி, மார்ச் 30: குன்னூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வரும் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்லுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் ராமசந்திரன் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளில் தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த இரு நாட்களாக குன்னூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அவர் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது பேசியதாவது:குன்னூர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வரும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைக்கப்படும். மேலும், குன்னூர் நகரில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிட பாடுபடுவேன்.