ஸ்ரீவைகுண்டம், மார்ச் 30: வைகுண்டம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் கிராமப் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் பொது மக்களிடையே திறந்த வேனில் வாக்குசேகரித்தார். தொடர்ந்து சுப்பிரமணியபுரம், பொன்னன்குறிச்சி, வெள்ளூர், மாரியம்மாள்புரம், மருகால்தலை, ஆதாளிகுளம், கெட்டியம்மாள்புரம், தோழப்பன்பண்ணை, சிவகளை, சிவகளை பரும்பு, நைனார்குளம், ஆவாரங்காடு, கீழ்பிடாகைகஸ்பா ஊராட்சி, மாங்கொட்டாபுரம், மங்களக்குறிச்சிஊராட்சி, சிறுதொண்டநல்லூர்ஊராட்சி, மொட்டதாதன்விளை, சக்கம்மாள்புரம், கொத்தல்லரிவிளை,நட்டாத்தி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது கிராமபகுதிகளில் திரளான பெண்கள் வேட்பாளர் சண்முகநாதனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.ஆழ்வார்த்தோப்பு கிராமத்தில் பிரசாரத்தின் போது சண்முகநாதன் பேசுகையில், ‘ அதிமுக தேர்தல்அறிக்கையில் குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ.1500, வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி, முதியோருக்கானஉதவித்தொகை ரூ.2000ஆக உயர்த்த நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.