வேலூர், மாரச் 30: வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக சுவற்றில் கட்சி சின்னங்கள் வரைந்தது உட்பட 86 வழக்குகள் காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தேர்தல் அலுவலர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.