திருவெறும்பூர், மார்ச் 30: திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நவல்பட்டு அண்ணாநகர் 1, 2, 3 ஆகிய பகுதிகளில் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் நீண்டநாள் பிரச்னையான பாதாள சாக்கடை திட்ட பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அடிப்படை வசதிகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஏற்கனவே கிராமசபை கூட்டம் நடத்தி இந்த பகுதியில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளதால், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் இருக்கும் என்றும் கூறினார்.