திருவாரூர், மார்ச் 30: நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோதிராமன் தொகுதி முழுவதும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஜோதிராமனுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் நேற்று வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்தில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்படி கீழவிடையல், மேலவிடையல், சித்தன்வாழுர், கண்டியூர், மாத்தூர், சாரநத்தம், மாணிக்கமங்கலம், அரவூர், கொட்டையூர், நார்த்தங்குடி, பாப்பாகுடி, பூந்தோட்டம்சாத்தனூர், தென்குவளவேலி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் நன்னிலம் தொகுதியின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும்.