முத்துப்பேட்டை, மார்ச் 30: முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் சவுந்தரநாயகி அம்பிகா சமேத அபிமுக்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக முனீஸ்வர கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சந்தன காப்பு அலங்காரமும் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை நடத்தினர். பின்னர் வாணவேடிக்கை நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கிராம மக்கள் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.