பெரம்பலூர்,மார்ச் 29: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக அரவிந்த் ஜி.தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்து தேர்தல் செலவின பார்வையாளரால் 3 கட்டமாக ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவின விபரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு பணியில் ஒரு அங்கமாக வேட்பாளர் பராமரிக்க வேண்டிய தேர்தல் செலவினங்கள், வேட்பாளர் பராமரிக்கும் செலவின பதிவேடு, வவுச்சர் ரசீதுகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் செலவின பார்வையாளரால் தணிக்கை செய்யப்பட்டது.