குளித்தலை, மார்ச் 29: கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் ரோட்டில் உள்ளது அய்யர்மலை கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தில் ஆண்டாண்டு காலமாக பங்குனி உத்திரத்தன்று அய்யர் மலையில் இருந்து உற்சவர் சாமி குளித்தலைக்கு வரவழைக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளத்தை அடைந்து சிறப்பு அலங்காரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது இந்நிலையில் கடந்த வருடம் கொரோனோ தாக்குதலால் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. அதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த வருடம் பங்குனி உத்திரத்தன்று மீண்டும் தெப்ப உற்சவம் நடைபெற இந்து அறநிலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் நேற்று வழக்கம்போல் பங்குனி உத்திர தெப்ப உற்சவம் நடைபெற்றது.