துறையூர், மார்ச் 26: துறையூர் தனி தொகுதி திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் கடந்த 10 நாட்களாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பச்சைமலையில் உள்ள மணலோடை பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், பச்சைமலை பகுதிக்கு முதலில் மின்சாரம் வழங்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். எப்போதும் மலைவாழ் மக்களுக்கு பாதுகாவலனாக இருப்பது திமுக ஆட்சி தான். இதுவரை மலைவாழ் மக்களை சந்தித்த முதல் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
பச்சைமலை பகுதியில் புதிதாக கூட்டுறவு கடன் வங்கியை அமைத்து தரக்கோரி சட்டமன்றத்தில் பேசினேன். எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதால் என்னுடைய கோரிக்கை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. மலைவாழ் மக்களுக்கு சாதி சான்று வழங்க காலம்தாழ்த்தி வருகின்றனர்.திமுக ஆட்சியில் 100 நாட்களில் சாதி சான்று வழங்கப்படும். பச்சைமலை பகுதியில் புதிதாக கூட்டுறவு கடன் வங்கி அமைக்கப்படும் என்றார்.