திருச்சி, மார்ச் 26: திருச்சிக்கு விமானத்தில் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் ரங்கத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் சேர்த்து திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ரங்கம் ராஜகோபுரம் அருகே இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.