சாத்தூர், மார்ச் 26: சாத்தூர் நகர பகுதிகளான குருலிங்காபுரம், அண்ணாநகர், பெரியார்நகர், மேலக்காந்தி நகர், கீழ காந்திநகர், நடராஜர் தியோட்டர் ரோடு,ஆண்டால்புரம்,புதுபாளையம் உள்ளிட்ட பகுதியில் அமமுக ேவட்பாளரான எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்எல்ஏ தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த பகுதியில் குடிநீர் பிரச்னையை போக்க மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி அமைத்துள்ளேன், பலபகுதிகளில் தார்சாலை, வீட்டிற் குடிநீர் இணைப்பு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். சாத்தூர் பஸ்நிலையம், தேசிய நெடுஞ்சாலை படந்தால் சந்திப்பில் உயர் மின்கோபுரம் அமைத்துள்ளேன். மேலும் சாத்தூர் படந்தால் சந்திப்பில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.