திண்டுக்கல், மார்ச் 26:திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்ட அளவில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு தொழிற்சங்கங்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கையெமுத்து இயக்கம் நடைபெற்றது. இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பில் செயல்படும் கட்டுமான தொழிலாளர்கள் நல உரிமை சங்க தலைவர் தனமணி கூறியதாவது: அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கைகளை பொதுமக்கள் முன் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கோரிக்கைகள் முழுக்க முழுக்க அருந்ததியர் பெண் தொழிலாளர்களின் கோரிக்கையாகும். தொழிலாளர்களின் நலன் கருதியே தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.