தேர்தல் அறிக்கை சூப்பர் திமுகவுக்கு விவசாய சங்கம் ஆதரவு

திருச்சி, மார்ச் 25: திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் கூறுகையில், மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் தமிழகத்தில் தடை செய்யப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் கொண்டு வரப்படும். இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். கரும்புக்கு ரூ.4,000, நெல்லுக்கு ரூ.3,000 வழங்கப்படும் போன்ற விவசாயிகளுக்கு சாதகமான பல்வேறு வாக்குறுதிகள் அளித்துள்ள திமுக தேர்தல் அறிக்கையை விவசாய சங்கம் வரவேற்கிறது. எனவே வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகளை சந்தித்து திமுக வெற்றிக்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

Related Stories: