சாத்தூர், மார்ச் 25: ராஜபாளையம் ஒன்றிய பகுதியில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இத்தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுடன், நெசவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார். அவர் எஸ்.திருவேங்கிடாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அய்யனாபுரம், சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சொக்கலிங்காபுரம், மில் கிருஷ்ணாபுரம், கம்மாப்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.