தாம்பரம், மார்ச் 24: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா செம்பாக்கம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், ‘அமைச்சராக இருந்தபோது முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி பேரூராட்சியாக இருந்த செம்பாக்கம், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், புதிய பூங்காக்கள், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பு பெற்று தருவேன். செம்பாக்கம் நகராட்சி பகுதி முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கப்படும். வேலைக்கு செல்லும் செம்பாக்கம் மக்களுக்கு முக்கிய பிரச்னையாக இருக்கக்கூடிய கேம்ப்ரோடு-சேலையூர் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க செம்பாக்கம்-சேலையூர் இணைப்பு மேம்பாலம் அமைக்கப்படும்,’ என்றார்.