நாங்குநேரி, மார்ச் 24: முழு வாக்களிப்பை வலியுறுத்தி நாங்குநேரி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். நாங்குநேரி அருகேயுள்ள சூரங்குடி கிறிஸ்டோபர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி களக்காட்டில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கல்லூரியின் தலைவர் பிரவீன் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். களக்காடு சுகம் மருத்துவமனை மருத்துவர் ஆதாம் சேக்அலி கொடி அசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.