தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

சேலம், மார்ச் 23: சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, சேலம் அம்மாப்பேட்டை கமாராஜர் நகர் ஸ்ரீகணேஷ் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்துவருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தை, நேற்று முன்தினம் சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை, தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை,மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுக்காக்கும் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, தெற்கு தொகுதி தேர்தல் அலுவலரும் மாநகராட்சி கமிஷனருமான ரவிச்சந்திரன், மாநகர பொறியாளர் அசோகன், உதவி கமிஷனர் சண்முக வடிவேல், போலீஸ் உதவிகமிஷனர் ஆனந்த குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிதேவி, தேர்தல் துணை தாசில்தார்  ஜாஸ்மின் பெனாசிர், பொதுப்பணித்துறை முருகேசன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: