தூத்துக்குடி,மார்ச்23: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சமக வேட்பாளர் சுந்தரை ஆதரித்து கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அவர் தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை துவக்கினார். தூத்துக்குடி தேரடி திடலில் அவர் பேசுகையில்: எங்கள் கூட்டணி ஒரு மாற்றத்தை உருவாக்கும். எல்லா விஷயத்திலும் மாற்றம் முக்கியம். அப்போது தான் நாடு முன்னேறும். அதிமுகவின் பெரிய ஆளுமை கொண்ட தலைவி தற்போது இல்லை. இதனால் அவர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்தும் இலவசமாக தருவதாக கூறுகிறார்கள்.