கீழ்வேளுர், மார்ச் 23: கீழ்வேளூர் அருகே வெட்டாற்று பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 7 பேரை கைது ெசய்த போலீசார் 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கோகூர் வெட்டாறு பகுதியில் மாட்டுவண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கீழ்வேளூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், கலியபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோது கோகூர் சிவன்கோவில் பின்புறம் உள்ள வெட்டாற்று பகுதியில் மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றி கொண்டிருப்பது தெரிந்தது. 7 மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றி கொண்டிருந்த 7 பேரை போலீசார் பிடித்தனர்.