ராமநாதபுரம், மார்ச் 22: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ராமநாதபுரம் மீன் மார்க்கெட், காய்கறி சந்தை வியாபாரிகளிடம் நேற்று கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பழ வியாபாரிகள் வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு பழங்கள் கொடுத்து வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். தனக்கு ஆதரவு தெரிவித்த வியாபாரிகளுக்கு வேட்பாளர் முத்துராமலிங்கம் சால்வை அணிவித்து கவுரவித்தார்.
மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார். நேதாஜி சுபாஷ் சேனை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திலிப் வாண்டையார், கீழக்கரை முக்குலத்தோர் புலிப்படை தங்கதுரை ஆகியோர் தங்கள் அமைப்புகளில் இருந்து விலகி 30க்கும் மேற்பட்டோருடன் வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.