புதுக்கோட்டை, மார்ச்21: மாணவர்களின் அன்றாட வகுப்பறை செயல்பாடுகளில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செயலாராய்ச்சி சமர்ப்பித்தல் பயிலரங்கம் நடந்தது. ஆய்வுக்குழு உறுப்பினர்களாக மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்கள் நடராஜன் (புதுக்கோட்டை), மயில்வாகணன் (பெரம்பலூர்), கல்வியாளர்கள் இளவரசு (திருச்சி), ராஜ்குமார் (புதுக்கோட்டை), சின்னக்கவுண்டர் (கரூர்), வரதராஜ் (பெரம்பலூர்), அன்புச்செல்வன் (திருச்சி) மற்றும் பெலிசிடா விமலா (கரூர்) ஆகியோர் செயல்பட்டனர். பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள் தாங்கள் மேற்கொண்ட செயலாராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றனர்.