கரூர், மார்ச். 21: கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுதும் மார்ச் 12ம்தேதி முதல் 19ம்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் திமுக, அதிமுக உட்பட முக்கிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டன. நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த மனுக்களில் 40 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.