உடுமலை, மார்ச் 21: உடுமலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை சரவணா மில் அருகே பிரசாரத்தை துவங்கினார். வாசவி நகர், அனுஷம் நகர் உள்ளிட்ட நகர பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேலும் ஏ.நாகூர் முதல் பூசாரிபட்டி வரை வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டார். அதிமுக மற்றும் பாஜ, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர், இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும்.