வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு பிடிவாரண்ட்

நெல்லை, மார்ச் 20: பாளையை சேர்ந்தவர் வக்கீல் உச்சினிமாகாளி. இவர், கடந்த 3-2-2015 அன்று தன்னை தாக்கியதாக அப்போதைய மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ செல்வம், சிறப்பு எஸ்ஐ ரெங்கசாமி, காவலர்கள் மரியதாஸ், ராம்குமார் ஆகியோர் மீது நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 5)  தனி புகார் மனு அளித்தார். இதன் மீதான விசாரணை, நேற்று நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5ல் நடந்தது. அப்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ செல்்வம், சிறப்பு எஸ்ஐ ரெங்கசாமி, காவலர்கள் மரியதாஸ், ராம்குமார் ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

Related Stories: