நெல்லை, மார்ச் 20: பாளை. அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் செயினை அபேஸ் செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். வல்லநாடு அருகே உள்ள ஆறாம்பண்ணையை சேர்ந்தவர் சுடலை மனைவி ராஜம்மாள் (59). நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்துவிட்டு திருச்செந்தூர் செல்லும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார். கிருஷ்ணாபுரத்தை கடந்து செல்லும் போது ராஜம்மாள் அருகில் உட்கார்ந்திருந்த 2 பெண்கள், அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை நைசாக அபேஸ் செய்தனர்.