சேலம், மார்ச் 20: சங்ககிரி தொகுதி திமுக வேட்பாளர் ராஜேஷ், நேற்று தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். பழைய இடைப்பாடி ரோட்டில் உள்ள சிவமாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட அவர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் 11வது வார்டு நல்லப்பநாயக்கர் தெரு, 4வது வார்டு முதலியார் தெரு உள்பட அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்த தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏக்களாக இருந்தவர்கள் எந்த பிரச்னையையும் தீர்த்து வைக்கவில்லை. குறைகளை கூட கேட்காமல் சென்றுவிட்டனர். நான் வெற்றி பெற்றால், மக்களாகிய நீங்கள் தான் எம்எல்ஏ., நீங்கள் என்னை தேடி வரவேண்டியது இல்லை. நானே உங்களை தேடி வந்து, உங்களது பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். எனது வெற்றி உங்களது வெற்றி.