மு.க.ஸ்டாலினுக்கு திருச்சியில் வரவேற்பு திருச்சி கிழக்கு தொகுதியில் பட்டாவுடன் கூடிய வீட்டு வசதி ஏற்படுத்தி தருவேன் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வாக்குறுதி

திருச்சி, மார்ச் 20: திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கேகே நகரில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பட்டாவுடன் கூடிய வீட்டு வசதி ஏற்படுத்தி தருவேன் என்று உறுதியளித்தார். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் அனைத்து வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நேற்று காலை வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 38வது வார்டு கே.கே.நகர் பகுதியில் வியாசர் தெருவில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் இனிகோ இருதயராஜிக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

நேற்று மாலை திருச்சி கல்லுக்குழி, மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் திறந்த ஜீப்பில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், பட்டா இல்லாமல் வாழ்ந்து வரும் மக்களுக்கு பட்டாவுடன் கூடிய வீட்டு வசதியை ஏற்படுத்தி தருவேன் என உறுதியளித்தார். வேட்பாளர் இனிகோ இருதயராஜூடன் கே.கே.நகர் பகுதி செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட திமுகவினர் உடன் சென்றனர்.

Related Stories: