லால்குடி மார்ச் 20: லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் லால்குடி கிழக்கு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது லால்குடி சூசையப்பர் ஆலயம் வட்டார பங்குதந்தை பீட்டர் ஆரோக்கியதாசிடம் சென்று ஆசி பெற்றார். மணக்கால் ஊராட்சியில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மணக்கால் கிழக்கு, கொப்பாவளி, ஆதிகுடி ,மேட்டாங்காடு, அன்பில் படுகை ,நடராஜபுரம், ஆலங்குடி மகாஜனம், குமாரபாளையம், கே.வி . பேட்டை டி.கல்வி க்குடி ,கொள்ளுமேடு, நத்தம், ஆகிய பகுதிகளில் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நத்தம் ஆதிமூல பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில்தான், கொள்ளிடம் ஆற்றில் செங்கரையூர் - பூண்டி இடையே பாலம் அமைக்கப்பட்டது.