சீர்காழி, மார்ச் 20: வைத்தீஸ்வரன் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர், இந்த கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு தினம்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.