மயிலாடுதுறை, மார்ச் 20: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மூலிகை தோட்டம் திறப்பு விழா மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தருமபுரம் ஆதீனம், கலெக்டர் லலிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மூலிகை தோட்டத்தை திறந்து வைத்து மூலிகை செடிகளை நட்டு வைத்தனர்.