திருப்பூர், மார்ச் 19: தேர்தல் பணிகளை முறையாக வகைப்படுத்தவில்லை என பட்டதாரி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்து, தலைமை தேர்தல் ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளது. இதுகுறித்து, பட்டதாரி இளநிலை ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் முத்து கூறியதாவது: வழக்கமாக ஆசிரியர்களின் ஊதியம், அனுபவங்களை அடிப்படையாக கொண்டே தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்படும். தேர்தல் பணி விண்ணப்பங்களிலும் இதற்கான விபரங்கள் கேட்கப்படுகின்றன.
அதிக ஊதியம் பெறுவோருக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியும், அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு பி2, பி3, பி4 அலுவலர்கள் பணியும் வழங்கப்படும்.