மண்ணச்சநல்லூர், மார்ச் 19: தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வாய்ப்பு தாருங்கள் என்று சனமங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி பிரசாரம் செய்தார். மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி நேற்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சனமங்கலம், திருப்பட்டூர், சனமங்கலம், சீதேவிமங்கலம், மாரமரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது மாவட்ட சிறும்பான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், அம்மா பேரவை செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், மாணவரணி மாவட்ட செயலாளரும் திருப்பைஞ்சீலி கூட்டுறவு வங்கி தலைவருமான அறிவழகன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுமார், ஆதாளி, ஆமூர் ஜெயராமன் மற்றும் கூட்டணி கட்ச நிர்வாகிகள் உடனிருந்தனர்.