குளித்தலை, மார்ச் 19: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ராஜேந்திரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி (32), புரோகிதர். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டு ஆகிறது. மனைவி ஜனனி(28), 6 வயதில் மகன் உள்ளார். தற்போது ஜனனி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் புரோகிதர் பார்த்தசாரதி கடன் தொல்லையால் அவதிக்குள்ளாகி வந்த நிலையில் நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனமுடைந்த மனைவி ஜனனி நேற்று முன்தினம் இரவு வீட்டு மாடியின் விட்டத்தில் வேஷ்டியில் தூக்கிலிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் கணவர் கதவைத் தட்டி பார்த்தபோது திறக்காமல் இருந்துள்ளது. பின்னர் ஜன்னலில் திறந்து பார்த்தபோது ஜனனி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே மீட்டு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.