புதுக்கோட்டை, மார்ச் 18: புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் சேவை மைய கட்டிடத்தில்சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வானிலை ஆய்வுத்துறை சார்பில் விவசாயிகளுக்கான வானிலை ஆய்வு பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் வானிலை சார்ந்த வேளாண்மை முன்னறிவிப்பு செய்திகளை எப்படி பெறுவது, மழைநீர் சேகரிப்பு, இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளின் பயன்பாட்டை குறைத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இந்திய வானிலைத்துறையின் மேக்தூத் மற்றும் டாமினி கைபேசி செயலிகளின் பயன்பாடு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.