திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி, மார்ச் 18: திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தீவிர வாக்கு சேரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருச்சி காந்திமார்க்கெட், வாழைக்காய் மண்டியில் உள்ள வியாபாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள், சுமைதுாக்கும் தொழிலாளர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். வேட்பாளருடன் அவைத்தலைவர் அய்யப்பன், துணை செயலாளர் ஜாக்குலின், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குப்தா, அன்பழகன், ஜவஹர்லால் நேரு, முத்துக்குமார் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் உடன் சென்றனர்.

Related Stories: