திமுக கூட்டணியில் இருந்து அமைச்சர் பதவிக்காக காங். ஓடியது துரதிர்ஷ்டம்: மார்க்சிஸ்ட் அகில இந்திய செயலாளர் தாக்கு

 

தக்கலை: மார்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் தக்கலையில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய செயலாளர் எம்.ஏ. பேபி, மாநில செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில செயலாளர் சண்முகம் பேசியதாவது: நீட்ேதர்வுக்கு எதிராக திராவிடர்கழகம் அறிவித்த பிரசார பயண போராட்டத்துக்கு அனுமதி வழங்கிய அரசு தற்போது அனுமதியை மறுத்துள்ளது.

தடையை நீக்கி அனுமதியை தவெக அரசு வழங்கிட வேண்டும். காவிரி பிரச்னையில் கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்திக்க செல்வது என்ன விளைவை ஏற்படுத்த முடியும். முதல்வரின் பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எங்களை பொறுத்தமட்டில் ேதவையற்ற பயணமாக கருதுகிறோம். நெல்லை பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது பாடலாக பாடியது கண்டனத்துக்குரியது. இது போன்ற பிரச்னைகளில் தமிழக அரசு உறுதியாக முடிவு எடுக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும். வந்தேமாதரம் முழுமையாக பாடுவதை மார்க்சிஸ்ட் ஏற்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்திற்கு பிறகு அகில இந்திய செயலாளர் எம்.ஏ.பேபி அளித்த பேட்டி: ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு எதிராக வலுவான மாற்று அணி அமைக்க இடதுசாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். 2024 தேர்தலில் பிஜேபி மோடி தோற்கடிக்கப்பட்டு இருக்க வேண்டும். அகில இந்திய அளவில் சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம் எல் ஆகிய கட்சியின் பிரதிநிதிகள் கூடி மாற்று அணியினை அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இது போன்று தமிழக அளவில் திட்டமிட்டு ஆலோசனைகளை மேற்கொள்ள இருக்கின்றனர். திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அமைச்சர் பதவிக்காக சென்றது துரதிருஷ்டமானது. இடதுசாரிகளின் கருத்துக்களுடன் ஒத்துப் போகும் கட்சியுடன் இணைந்து மாற்று அணியை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: