தஞ்சை, மார்ச் 16: தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டையில் பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை படிக்கும் 1200 மாணவிகளில் 56 பேருக்கும், ஒரு ஆசிரியைக்கும் கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்று ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.